காவல் நிலையத்தில் 2 பெண்கள் கற்பழிப்பு: காக்கிச் சட்டைகள் வெறிச் செயல்
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் போலீசாரே துச்சாதனர்களாக மாறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களைதுகிலுறிந்து காவல் நிலையத்தில் வைத்தே கற்பழித்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி-வேலூர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள ஊத்தங்கரை தாலுகாவில் ஏலச்சூர் கிராமத்தில் குறவர்இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் ஏராளமாக வசித்து வருகின்றனர்.
வாணியம்பாடியில் இருந்து போலீசார் அடிக்கடி இந்தப் பகுதிக்கு வந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுவந்துள்ளனர். இந்தப் பழங்குடியினருக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாரும் இல்லாததால் இவர்களை அடிக்கடிபோலீசார் துன்புறுத்தி வந்தனர்.
இந் நிலையில் சமீபத்தில் பார்க்க நன்றாக இருக்கும் சில பெண்களை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றுகூறி வாணியம்பாடி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து இந்தப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மங்கம்மாள் என்ற பெண் கூறுகையில், என் சேலையை போலீஸ்காரர்கள் உருவினர். ஒருவர்முகத்தில் கடித்தான். என்னை பல விதத்தில் பாலியல்ரீதியில் அவர்கள் துன்புறுத்தினர் என்றார்.
மணிமேகலை என்ற 18 வயது பெண்ணையும் காக்கிச் சட்டை கருங்காலிகள் விடவில்லை. அந்தப் பெண்கூறுகையில், என்னிடம் வந்த போலீசார் நீ ரொம்ப அழகா இருக்கே என்று கூறிக் கொண்டே உடைகளைஉரித்தனர். நான் தப்பிக்க முடியவில்லை. என்னை கற்பழித்து விட்டனர் என்றார்.
மேலும் பல பெண்களிடமும் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். இது குறித்துத் தட்டிக் கேட்ட 11 பேரைபொய் கேஸ் போட்டு சிறையில் தள்ளியுள்ளனர்.
காவல் நிலையத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் இச் சம்பவம் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவைஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும்பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தவறு செய்த காக்கிச் சட்டைக் கும்பல் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையில் கல்வியமைச்சர் தம்பிதுரை இன்று தர்மபுரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அவரிடம்நிருபர்கள் இது குறித்துக் கேட்டபோது, இச் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும். தவறு செய்தவர்கள் மீது நிச்சயம்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications