பார்வையற்ற ஆண்டிப்பட்டி இளைஞரின் ஆய்வுப் படிப்புக்கு ஜெ. ரூ.25,000 உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர் ஒருவருக்கு டாக்டர் பட்ட ஆய்விற்காக முதல்வர் ஜெயலலிதாரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பொ. இளங்கோ. இவர் டாக்டர் பட்ட ஆய்விற்கு நிதியுதவிஅளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.25,000வழங்கி உதவினார்.
இந்நிதியுதவியை சென்னையில் இளங்கோவிடம் ஜெயலலிதா வழங்கினார்.












Click it and Unblock the Notifications