எம்.பி.ஏ., எம்.சி.ஏ. நுழைவுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் நாளை நடத்த இருந்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.
தமிழக அரசு எம்.பி.ஏ., எம்.சி.ஏ பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த கட்டளையிட்டிருந்தது. இதையடுத்து நாளை(12ம் தேதி) இத் தேர்வை நடத்த அண்ணா பல்கழைக் கழகம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், இந்தத் தேர்வுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. இதை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்குவிசாரணையில் இருக்கும் வரை, பல்கலைக்கழகம் எந்த விண்ணப்பங்களையும் பரிசீலிக்கக்கூடாது என்று கடந்த மாதம் 30ம் தேதிஇடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அதே நேரத்தில் இம் மாதம் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களை வாங்க அனுமதி அளித்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வாங்குவதை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது.
இந் நிலையில் கடந்த 7ம் தேதி நீதிமன்றம் அளித்த இன்னொரு உத்தரவில் இம் மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்களை வாங்க அனுமதிதந்துள்ளது.
எனவே, எம்.பி.ஏ., எம்.சி.ஏவில் சேர விரும்புபவர்கள் இந்த மாதம் 31ம் தேதி வரை நேரில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
இதன் பின்னர் நுழைவுத் தேர்வுகான புதிய தேதி அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications