தமிழக சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
சென்னை:
36 நாள் கூட்டத்திற்குப் பின் தமிழக சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 9ம் தேதி ஆளுனர் உரையுடன் துவங்கியது. மார்ச் 27ம் தேதி பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.
இந்த கூட்டத் தொடரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுஇடங்களில் புகை பிடிப்பதற்கு தடை, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தடை, அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய தடை,கேபிள் டிவி கட்டுப்பாட்டுச் சட்டம், ஒரே நபர் இரண்டு அரசு பதவிகளை வகிக்கத் தடை, மேயர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் அரசிடம்அனுமதி பெறுவது தொடர்பான சட்ட மசோதா ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மே 25ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சட்டசபை இடைத் தேர்தல் வருவதால்அதற்கு வசதியாக முன் கூட்டியே கூட்டத் தொடர் முடிவடைந்து விட்டது.












Click it and Unblock the Notifications