ரயிலில் ஆண் குழந்தையின் பிணம்: நரபலி தரப்பட்டதா?
திருச்சி:
சென்னையில் இருந்து திருச்சி வந்து சேர்ந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு குழந்தையின் பிணம் உடல்வெட்டுக் காயங்களுடன் கிடந்தது.
நேற்றிரவு இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது ஒரு ரிசர்வ்ட் பெட்டியின் கதவின்பின்னால் ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட ஒரு ஆண் குழந்தையின் பிணம் கிடந்தது.
அந்தக் குழந்தையின் முகத்தில் பலத்த வெட்டுக் காயம் இருந்தது. அதன் கழுத்தில் எருக்கம் பூ மாலைபோடப்பட்டிருந்தது. இதனால் அந்தக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயது தான் இருக்கும். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார்குழந்தையின் உடலை மீட்டனர்.
ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் கிடத்தப்பட்டிருந்த அந்த பிஞ்சின் உடலை பொது மக்கள் கண்ணீரோடுபார்த்துவிட்டுச் சென்றனர்.
உடல் பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கும் பதிவு செய்யப்பட்டுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications