சென்னையில் மீண்டும் துணிகர கொள்ளை
சென்னை:
சென்னையில் தொடர்ந்து வரும் கொள்ளைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக காசிமேடு பகுதியில் மீண்டும் ஒருகொள்ளைக் கும்பல் புகுந்து, 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.60,000 பணத்தை அள்ளிச் சென்றது.
காசிமேட்டில் வசிப்பவர் புஷ்பராஜ். இவருடைய மனைவி பவானி, பவானியின் தாயார் மற்றும் குழந்தைகள்ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் தங்கள் வீட்டில்தான் தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனாலும் எந்தவிதமான ஓசையும்எழுப்பாமல் அவர்களுடைய வீட்டின் மாடி வழியாக வீட்டுக்குள் நள்ளிரவில் கொள்ளையர்கள் நுழைந்தனர்.
பின்னர் பீரோவையும் ஓசைப்படாமலேயே உடைத்துத் திறந்து, அதிலிருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும்ரூ.60,000 ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தனர்.
அதன் பிறகு தாங்கள் வந்ததே தெரியாமல் சத்தமே இல்லாமல் கொள்ளையர்கள் அவ்வீட்டை விட்டு வெளியேறிஓடி விட்டனர்.
இவ்வளவு நடந்த பிறகும் அவ்வீட்டில் உள்ளவர்கள் மற்றொரு அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டுதான்இருந்தனர். காலையில் பவானி எழுந்து பார்த்தபோதுதான், பீரோ உடைக்கப்பட்டிருப்பதும் நகை மற்றும் பணம்கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
வீட்டுக்காரர்கள் வீட்டிலிருக்கும்போதே நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.