சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு ஒருவர் பலி
சென்னை:
சென்னையில் கொளுத்தும் வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் இன்று 55 வயது மதிக்கத்தக்க ஒருமுதியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் படு உக்கிரமாகவே இருக்கிறது. கடந்த 4ம் தேதி அக்னிநட்சத்திரம் தொடங்கிய அன்றும் அதற்கு மறுநாளும் மட்டுமே தமிழகத்தின் பல இடங்களிலும் மழை பெய்து,மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆனால் அதன் பிறகு, அக்னி நட்சத்திரம் உண்மையிலேயே விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. தமிழகம் முழுவதும்நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
சென்னை வெப்பத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வழக்கம்போலவே இந்த ஆண்டும் சென்னை மக்களைவெயில் வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது.
சென்னை செங்குன்றத்தில் இன்று பிற்பகல் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இந்த முதியவர், கொளுத்தும்வெயிலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை கொண்டு போய் அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறந்துபோன அந்த முதியவர் குறித்த விவரங்கள் ஏதும் யாருக்கும் கிடைக்கவில்லை.
சென்னையில் இந்த ஆண்டு கோடைக் காலத்தின் அதிக பட்ச வெப்பநிலையாக 110 டிகிரி பாரன்ஹீட் இன்றுபதிவானது.
இதே வெப்பநிலையோ அல்லது இதற்கும் அதிகமாகவோதான் அடுத்த இரண்டு நாட்களுக்கும் நீடிக்கும் என்றுசென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் வெயிலுக்கு 54 பேர் பலி:
இதற்கிடையே தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் வெயில் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் 54 பேர் வரை கொளுத்தும் வெயிலுக்குப் பலியாகிச் சரிந்துள்ளனர்.
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசுஅறிவித்துள்ளது.
ஆந்திராவின் அண்டை மாநிலமான ஒரிசா மற்றும் கர்நாடகாவும் வெயிலின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன.