For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை அருகே 2 கைதிகள் தப்பி ஓட்டம்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குத்திரும்பும் வழியில், போலீசாரை ஏமாற்றி விட்டு 2 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

ராஜேஷ் மற்றும் ஸ்டீபன் லாரன்ஸ் ஆகிய இரண்டு கைதிகளும் பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று விசாரணைக்காக குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் விசாரணை முடிந்து அவர்களை நான்கு போலீசார் ஜீப் மூலம் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்குஅழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ராஜேஷும் ஸ்டீபன் லாரன்சும் திடீரென்று போலீ"ஸ் ஜீப்பிலிருந்து கீழே இறங்கி கண்ணிமைக்கும்நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சுதாரித்துத் துரத்துவதற்கு முன்பே அவர்கள் போலீசார் கண்களிலிருந்துமறைந்து விட்டனர்.

இதையடுத்து கைதிகளைத் தப்பவிட்ட நான்கு போலீசார் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக இவ்வாறு சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, கைதிகள் தப்பிப்பதைத்தடுப்பதற்காக சமீபத்தில்தான் "வீடியோ கான்பரன்ஸ்" திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கானசட்ட மசோதாவும் கடந்த வாரம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த "வீடியோ கான்பரன்ஸ்" திட்டத்தின் மூலம் நீதிமன்றங்களும் சிறைகளும் இணைக்கப்படுவதால், சிறையைவிட்டு கைதிகள் வெளியேற வேண்டிய அவசியமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X