மக்களின் வேதனையே அதிமுகவின் சாதனை: இளங்கோவன்
சென்னை:
மக்களுக்கு வேதனை ஏற்படுத்தியதே கடந்த ஓராண்டு கால அதிமுக அரசின் சாதனையாக எடுத்துக் கொள்ளலாம்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
அதிமுக அரசின் ஓராண்டு கால ஆட்சி பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்துவகையிலும் இந்த அதிமுக அரசு இன்னல்களைத்தான் கொடுத்து வந்தது.
இதனால் மக்கள் பொங்கி எழுந்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்று கூடி தெருக்களில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
ஆக, மக்களுக்கு வேதனை ஏற்படுத்தியதே இந்த ஓராண்டு கால அதிமுக அரசின் சாதனை என்று எடுத்துக்கொள்ளலாம் என்றார் இளங்கோவன்.
இதற்கிடையே இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் இதுவரைஇல்லாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications