நக்கீரன் நிருபரிடம் தனி அறையில் போலீசார் விசாரணை
ஈரோடு :
சத்தியமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் ஒரு தனியறையில் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்திடம் போலீசார்விசாரணை நடத்தினர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிவசுப்பிரமணியத்தை 15 நாட்கள்போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல்செய்தனர்.
ஆனால் இரண்டு நாட்கள் மட்டும் தனியறையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி நேற்று சிவசுப்பிரமணியத்தை சத்தியமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனியறையில் வைத்துபோலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5 மணி வரை நடந்த இந்த விசாரணை இன்றும் தொடர்ந்துநடைபெற்றது.
இதற்கிடையே நேற்று போலீசார் சிவசுப்பிரமணியத்தை விசாரணை முடித்து அழைத்துக் கொண்டு வரும்போது,நிருபர்கள் புகைப்படம் பிடிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்கவே, சிவசுப்பிரமணியன் அதற்குஆட்சேபம் தெரிவித்து கோபப்பட்டுப் பேசவே அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications