ரயில்கள் மோத இருந்த சம்பவம்: தீவிரவாதிகள் சதியே காரணம்
ஈரோடு:
ஈரோடு அருகே பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளஇருந்தன. இந்தச் சம்பவத்திற்கு தீவிரவாதிகள் சதி காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவம் குறித்து பாலக்காடு பிரிவு ரயில்வே அதிகாரியானடைட்டஸ் கோட்சி சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
பெங்களூர்-தூத்துக்குடி ரயிலின் டிரைவர் சேதுமாதவன், கார்டு காளியப்பன், ஸ்டேஷன் மாஸ்டர் சாமிநாதன்,கேபின் ஊழியர் சுப்பிரமணியம் ஆகியோரிடம் டைட்டஸ் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைநடத்தினார்.
இதற்கிடையே ஊஞ்சலூருக்கு அருகே உள்ள ஒரு கைகாட்டிக் கிளையில் உள்ள சிக்னல் விளக்குஉடைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த சிக்னல் விளக்கை மூடியிருந்த இரும்பு வலையின்ஆணி பிடுங்கப்பட்டு, சிக்னல் விளக்கு சுக்கு நூறாக நொறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கக் கூடுமோ என்கிற ரீதியில் போலீசார் விசாரிக்கஆரம்பித்துள்ளனர்.
இப்பகுதியில் சமீப காலத்தில் இரு முறை ரயில்கள் தடம் புரண்டுள்ளன. 6 மாதங்களுக்கு முன் இங்குள்ளதண்டவாளத்தின் பிஷ் பிளேட்டுகள் கழற்றப்பட்டிருந்ததால் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு நான்கு பெட்டிகள்சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் இதே பெங்களூர்-தூத்துக்குடி ரயிலில் திருப்பத்தூர் அருகே கொள்ளைநடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிக்னல் விளக்கு உடைக்கப்பட்டிருப்பதற்கும் இந்தக் கொள்ளைக்கும் தொடர்புஇருக்கும் என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications