இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு
மாஸ்கோ:
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.அதே நேரத்தில் போரைத் தவிர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளது.
தீவிரவாதிகளை அனுப்பி வரும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா முயற்சி மேறகொண்டுள்ளநிலையில் ரஷ்யா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் யகோவென்கோ மாஸ்கோவில் நிருபர்களிடம்கூறுகையில்,
தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா எடுத்துள்ள தீவிரமான நிலையில் முழு நியாயம் உள்ளது. இந்த விஷயத்தில்எங்கள் நண்பனான இந்தியாவுக்கு உதவ ரஷ்யா தயாராக உள்ளது. தீவிரவாதத்தின் வலி எங்களுக்குத் தெரியும்.அதை நாங்களே அனுபவித்திருக்கிறோம்.
இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத்துக்கும் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தீவிரவாதத்துக்கு எதிரானபோருக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
அதே நேரத்தில் தெற்காசியாவில் போர் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இரு நாடுகள் இடையேபோர் மூண்டால் அது தெற்காசியாவை மட்டுமல்ல உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இரு நாடுகளும்போரைத் தவிர்க்க வேண்டும் என்றார் அலெக்சாண்டர்.