கோவையில் கார்-வேன் மோதல்: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் நேற்றிரவு காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் தூக்கிஎறியப்பட்டு உயிரிழந்தனர்.
காரை ஓட்டிக் கொண்டு வந்த டிரைவர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த வேனுடன்காரை மோதி விட்டார்.
இரு வாகனங்களுமே பயங்கரமான வேகத்தில் வந்து கொண்டிருந்ததால், மோதிய வேகத்தில் கார் அப்பளம் போலநொறுங்கி தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த நான்கு பேருமே காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு சிதறி விழுந்துஅந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேன் டிரைவரும் அதில் வந்த ஒருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications