முத்துக் கருப்பன் மீது லஞ்ச-ஊழல்துறை விசாரணை
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்து திடீரென தூக்கி எறியப்பட்ட முத்துக் கருப்பன் மீதுலஞ்ச-ஊழல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நான் ரவுடிக்கு ரவுடி, நல்லவனுக்கு நல்லவன் என்று வசனம் பேசிக் கொண்டு அடாவடியாக செயல்பட்டு வந்தவர்முத்துக் கருப்பன். இவருக்கும் தமிழகத்தின் பெரிய தாதாக்களுக்கும் நல்லுறவு உண்டு. குறிப்பாக ஜான்பாண்டியனுடன் இவர் கூட்டு சேர்ந்து பல கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுவதுண்டு.
போயஸ் தோடத்தில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து வந்த இவர் ஒரு நாள் திடீரென திருச்சி மாவட்டஆயுதப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு இவரது தாதா தொடர்புகள் மட்டுமின்றி இவர் குவித்துள்ள கோடிக்கணக்கான சொத்துக்களும் காரணமாகக்கூறப்பட்டன.
சென்னையில் மிகப் பெரிய பால்பண்ணை நடத்தி வரும் முத்துக் கருப்பனுக்கு கேரளத்திலும் ஆயிரக்கணக்கானஏக்கர் நிலங்கள், சொத்துக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தை இவர் கையாண்டபோக்கினால் வக்கீல்களேபோராட்டத்தில் இறங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூக்கி எறியப்பட்டார்.
இப்போது இவர் மீது லஞ்ச-ஊழல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவரைப்போலவே வருமானத்துக்கு மீறி சொத்து குவித்துள்ள மேலும் பல தமிழக காவல்துறை அதிகாரிகள் மீதும் லஞ்சஊழல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications