குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியது: அருவிகளில் வெள்ளம்
குற்றாலம்:
கேரளாவில் பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.குற்றாலத்திலும் சீசன் தொடங்கிவிட்டது.
மே மாதத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கும். அதுபோலவே இந்த ஆண்டும் பருவ மழை பொழியத் தொடங்கியுள்ளது.இதையடுத்து கேரளாவை ஓட்டியுள்ள கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்தக் கன மழை தொடர்பாக குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. குற்றாலும் முழுவதிலும் சாரல் மழை பெய்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
இம்மாத இறுதியில் தொடங்க வேண்டிய குற்றால சீசன் இப்போதே தொடங்கி விட்டது. செப்டம்பர் மாதத்தில் முடிவடையும். குற்றாலத்தில்நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய சாரல் மழை 7 மணி வரை நீடித்தது.
பொதுவாக மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் இருக்கும். இந்த வருடம் ஒரு வாரம்முன்னதாகவே தொடங்கிவிட்டது. கோடை வெயிலின் கொடுமையை தணிக்க மக்கள் இது போன்ற இடங்களுக்கு வந்து குவிகின்றனர்.
பிரதான அருவி, ஐந்தருவி போன்ற அருவிகளின் நேற்று பெய்த சாரல் மழைக்கு பின்னர் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. குற்றாலசீசனை மக்கள் நன்றாக அனுபவிக்கலாம்.