வாஜ்பாய் காஷ்மீர் பயணம்: சோனியாவுடன் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

எல்லையின் நிலவரம் குறித்து நேரில் அறிந்து வர பிரதமர் வாஜ்பாய் அடுத்த வாரம் காஷ்மீர் செல்கிறார்.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து இன்று காலை வாஜ்பாய்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.

வாஜ்பாயின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அத்வானியும் கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் மீது ராணுவரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

காஷ்மீர் செல்லும் வாஜ்பாய் தாக்குதல் நடந்த ராணுவ குடியிருப்புக்கும் செல்வார். காஷ்மீரில் அவர் இரண்டுநாட்கள் தங்கியிருந்து எல்லைப் பகுதி ராணுவப் படையினரைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார்.

இதையடுத்து அடுத்த வாரம் ஓய்வுக்காக அவர் குலுமணாலி செல்லவிருந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாகிஸ்தான் தூதர் அஷ்ரப் ஜஹாங்கீர் குவாசி ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் எனறு அரசு எழுத்துப்பூர்வமாக நேற்றிரவு ஆணை பிறப்பித்தது.

இந்த உத்தரவு பாகிஸ்தானின் துணைத் தூதரிடம் இந்திய வெளியுறவுத்துறை வழங்கியது. அவரை இந்தியவெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வரவழைத்து அந்த ஆணை தரப்பட்டது.

இதற்கிடையே எல்லைப் பகுதி கிராமங்ளில் வசித்து வந்த 12,000 மக்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

எல்லையில் இந்திய-பாகிஸ்தானியப் படைகள் இடையிலான சண்டை வலுத்துள்ளது. முதலில் துப்பாக்கிகள், கனரகதுப்பாக்கிகளால் தாக்கிக் கொண்ட இரு தரப்பினரும் இப்போது பீரங்கிகளால் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+