பன்றிகளை வளர்த்தவர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை:
நூற்றுக்கணக்கில் பன்றிகள் வளர்த்து சுகாதாரத்திற்கு சீர்கேட்டை விளைவித்தவரை குண்டர் சட்டத்தின் கீழ்போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் பன்றிகள் அதிக தொல்லை கொடுத்துவருகின்றன.
குடிநீர் பம்புகளை உடைத்தல், குடிநீரை அசுத்தமாக்குதல், சாலைகளில் கிடக்கும் நீர் நிலைகளில் உருண்டு புரளுதல்என்று அவை செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை.
இவற்றின் தொல்லைகளைத் தாங்கமுடியாத அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர், பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி போலீசாருக்குஉத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து போலீசார் செய்த விசாரணையில் தாம்பரத்தில் நேருஜி (36) என்பவர் நூற்றுக்கும் அதிகமாகபன்றிகள் வளர்ப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நேருஜியைப் போலீசார் குண்டர் தடுப்புச் சட்த்தின் கீழ் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications