ஓலைச் சுவடிகளை புத்தகங்களாக்கும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தமிழ், சமஸ்கிருதம், மராட்டி போன்ற பல மொழிகளில் இருக்கும் ஓலைச்சுவடிமற்றும் கையெழுத்துச் சுவடிகளில் உள்ள விவரங்களை புத்தகங்களாக பதிப்பிக்க உள்ளது. சுமார் 300 தலைப்புகளில் இந்தநூல்கள் வெளிடப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான சி. கோசலராமன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வல்லுநர் குழு கூடி முன்னுரிமை அடிப்படையில் பதிக்கப்பட வேண்டிய நூல்களை தேர்ந்தெடுத்துள்ளனர். நூலகத்தில் உள்ளஅறிஞர்களைத் தவிர்த்து கூடுதலாக 100 அறிஞர்களிடம் பதிப்பு பணிக்கு ஒத்துழைப்பு கேட்டுள்ளோம். இதில் 84 அறிஞர்கள்இதுவரை ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியுள்ளனர்.
மொத்தமாக 300 தலைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் 21 தலைப்புக்கள் புத்தகங்களை அச்சிடும் பணிதொடங்கிவிட்டன. இவற்றில் 11 நூல்கள் தமிழிலும் 6 நூல்கள் சமஸ்கிருதத்திலும், ஆங்கிலம், தெலுங்கு, மோடி மற்றும் மராத்திஆகிய மொழிகளிலும் தலா ஒரு நூலும் அடங்கும்.
தற்போது அச்சில் உள்ள நூல்கள் மன்னர் சரபோஜி பிறந்த தினமான செப்டம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.
சரஸ்வதி மஹால் நூலகத்திற்கான இணைய தளத்தை உருவாக்கும் பணியை C-DAC நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்தஇணைய தளத்தில் நூலக வரலாறு, சுவடிகள் சேகரிப்பு, நூலக வெளியீடுகள் மற்றும் அவற்றின் பட்டியல் போன்றவைஅடங்கியுள்ளன. 110 பக்கங்களுடன் இரண்டரை லட்ச ரூபாய் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த தளம் விரைவில்தொடங்கப்படும்.
நூலகத்தில் உள்ள நூல்கள் மற்றும் சுவடிகளின் அட்டவணையை கணினிமயமாக்க 50,000ரூபாய் செலவில் குஜராத்பல்கலைக்கழகத்திலிருந்து சாஃப்ட்வேர் வாங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 ரூபாய் செலவில் 124 புதிய நூல்கள்வாங்கப்பட்டுள்ளன. இன்னும் 1 லட்ச ரூபாய்க்கு நூல்கள் வாங்கும் திட்டமும் உள்ளது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான நூல்களும்வாங்கப்படும்.
நூலகத்தில் தீ தடுப்பு சாதனங்கள் 40 இடங்களில் பொருத்தப்பட உள்ளன. இந்த பணி இன்னும் 15 நாட்களில் நிறைவடையும்என்றார்.












Click it and Unblock the Notifications