Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னொரு போலி நிதி நிறுவனம் ரூ. 7 கோடி மோசடி: மீண்டும் ஏமாந்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நூற்றுக்கணக்கான போலி நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டுகோடிக்கணக்கில் அதை இழந்தனர் மக்கள்.

இந் நிலையில் சென்னையில் இன்னொரு நிதி நிறுவனம் பொது மக்களிடம் ரூ. 7 கோடி வரை மோசடி செய்துள்ளது.

சென்னை தியாகராய நகர் நானா தெருவில் உள்ளது பாலக்காடு பெனிபிட் பன்ட் எனப்படும் நிதி நிறுவனம். இந்த நதி நறுவனத்தில்கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். சென்னையைத் தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இதில்முதலீடு செய்துள்ளனர்.

இங்கு முதலீடு செய்து முதிர்வுக் காலம் வந்த வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை திரும்பக் கேட்டபோது, திருப்பித் தரமுடியாது என்று நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து முதலீடு செய்தவர்கள் இங்கு முறுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாருக்கும் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.

பாது மக்களிடம் இருந்து மொத்தம் 7 கோடி வரை இந்த நிறுவனம் வசூல் செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பணம் அனைத்தும்மோசடி செய்யப்பட்டு விட்டதாக முதலீட்டு செய்த மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலி நிதி நிறுவனங்களிடம் மக்கள் பல கோடிகளை இழந்துள்ள நிலையில்மீண்டும் அதில் போய் ஏன் பணத்தைப் போட அதிக வட்டி கிடைக்கும் என்ற பேராசைய காரணம். இந்தப் பேராசையால்மொத்தமாக பணத்தை இழந்து வருகின்றனர்.

இது போன்ற மோடி நிறுவனங்களை நடத்த போலீசார் ஏன் அனுமதிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

இன்னும் எத்தனை காலம்தான் இதுபோன்ற மோசடி நிறுவனங்களிடம் முதலீடு செய்து ஏமாறப் போகிறார்களோ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+