பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் திரும்ப அழைப்பு
கான்பெரா:
பாகிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் அனைவரும் அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றுஆஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வியாபார விஷயமாகவும் சுற்றுலாவுக்காகவும் பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும்உடனடியாகத் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரிக்கைகலந்த வேண்கோளை விடுத்துள்ளது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து இம்முடிவுமேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் பதற்றத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரைத் தான் தீவிரவாதிகள் முதலில் குறிவைத்துத் தாக்குவார்கள் என்பதால் ஆஸ்திரேலியர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியர்கள் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கூறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள நகரங்களுக்குப் போகவேண்டாம் என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான முறையில் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்என்றும் ஆஸ்திரேலியா கேட்டுக் கொண்டுள்ளது.
அணுகுண்டுகள் வைத்துள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றம்கவலையளித்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான அலெக்சாண்டர் டவுணர் கூறினார்.












Click it and Unblock the Notifications