நாளை முதல் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
டெல்லி:
நாளை முதல் வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகள் நடத்தப் போவதாக இன்று பாகிஸ்தான்கூறியது.
இந்தக் குறிப்பிட்ட தேதிகளில் ஏவுகணைச் சோதனைகளை நடத்தப் போகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஏவுகணைச் சோதனைகளை நடத்தும் போது இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் முறையாக அறிவித்து விட்டுத்தான் அந்தச் சோதனைகளை நடத்துவது தான் வழக்கம்.
அது போலவே தற்போதும் தாங்கள் ஏவுகணைச் சோதனைகளை நடத்தப் போவதாக இந்தியாவிடம் பாகிஸ்தான்தெரிவித்துள்ளது.
சிறிய ரக ஏவுகணைகள் முதல் இலகு ரக ஏவுகணைகள் வரை சோதனை நடத்தப்படவிருப்பதாகவும் பாகிஸ்தான்தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான நிருபமா ராவ் தெரிவித்தார்.
இந்த ஏவுகணைச் சோதனைகள் வழக்கமாக நடப்பது தான் என்று பாகிஸ்தான் கூறியுள்ள போதிலும், தற்போதுஎல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் இவை நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications