ஓய்வெடுக்க மணாலி சென்றார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் ஓய்வெடுப்பதற்காக இன்று காலை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலிக்குக் கிளம்பிச்சென்றார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பே ஒருவார காலம் ஓய்வுக்காக மணாலி செல்வதற்கு வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடந்த 14ம் தேதி ஜம்மூ அருகே உள்ள கலுச்சாக் ராணுவ முகாமைத் தீவிரவாதிகள் தாக்கி 30க்கும்மேற்பட்டவர்களைக் கொன்று குவித்ததையடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மணாலி செல்லும் தன்னுடைய திட்டத்தை ரத்து செய்த வாஜ்பாய், கடந்த மூன்று நாட்களாகக்காஷ்மீரில் பயணம் செய்தார். அப்போது கலூச்சாக் சம்பவத்தில் குண்டுக் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்துஆறுதல் கூறிய வாஜ்பாய் குப்வாரா எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பாகிஸ்தானுடன் இப்போதைக்குப் போர் வராது என்று கூறி நேற்று மாலையுடன் தன்னுடைய காஷ்மீர் பயணத்தைமுடித்துக் கொண்டு வாஜ்பாய் டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் இன்று காலை அவர் தனி விமானம் மூலம் மணாலிக்குக் கிளம்பிச் சென்றார். அங்கு மூன்று முதல்நான்கு நாட்கள் வரை அவர் தங்கியிருப்பார்.