தீவிரவாதிகளை தடுக்க ராணுவத்துக்கு முஷாரப் உத்தரவு?
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்குமாறு தனது 10வது கார்ப்ஸ் படைப் பிரிவுக்கு பர்வேஸ்முஷாரப் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாக இந்த நடவடிககைையை முஷாரப் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தீவிரவாதிகளைத் தடுக்காவிட்டால் பாகிஸ்தானைத் தாக்கத் தயங்கவே மாட்டோம் என அமெரிக்காவிடம்இந்தியா மிகத் தெளிவாகக் கூறிவிட்டது. தீவிரவாதிகளை தடுத்தால் மட்டுமே இந்தியப் படைகள்எல்லையைவிட்டு விலகும் எனவும் கூறிவிட்டது இந்தியா.
இதை பாகிஸ்தானிடம் எடுத்துச் சொன்ன அமெரிக்கா, தீவிரவாதிகளை தடுக்க நெருக்குதல் தந்துள்ளது. மேலும்ரஷ்ய அதிபர் புடின் மூலமாகவும் அமெரிக்காவிடம் இந்தியா தனது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையடுத்து இந்தியத் தாக்குதலை தவிர்க்க இந்த நடவடிக்கைகளில் முஷாரப் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாக் ஏவுகணை சோதனை: அமெரிக்கா அதிருப்தி
இதற்கிடையே பாகிஸ்தான் நடத்தியுள்ள இரண்டாவது ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்க அதிப் ஜார்ஜ் புஷ்கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்போது ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த ஏவுகணைச் சோதனைகள் இப்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும். இதை சோதனைகளைஇந்தியா பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இந்த ஏவுகணைச் சோதனைகளை இந்தியா பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் வாஜ்பாய்ஏற்கனவே கூறிவிட்டார்.
பாகிஸ்தானுக்கு யார் ஏவுகணை தருவது, அதன பலம் என்ன என்பது குறித்து இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும்.இந்த ஏவுகணைகள் மாதிரி பல மடங்கு அதிக சக்தி கொண்ட ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன. இதுபாகிஸ்தானுக்கும் தெரியும். இப்போது நடத்தப்படும் சோதனைகள் பாகிஸ்தான் நாட்டு மக்களைசந்தோஷப்படுத்தவும் அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவும் தான் என்று இந்தியா தெரிவித்துள்ளது.