இன்று முதல் மருத்துவக் கல்லூரி விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை:
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், பார்மஸி கல்லூரிகளில் சேர இன்று முதல்விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்குச் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.பிளஸ் டூ தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன.
அதிக கட்-ஆப் மார்க்குகளுடன் காத்திருக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பம் தருவதற்கானநாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இந் நிலையில் இன்று முதல் விண்ணப்பங்கள் தரப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 8ம் தேதி வரை வழங்கப்படும். இதன் விலை ரூ. 500. பார்மசி கல்லூரிவிண்ணப்பங்கள் ரூ. 300.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு இது இலவசமாக வழங்கப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை இந்த விண்ணப்பங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், செலக்ஷன் கமிட்டியிடம் ஜூன் 10ம் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும்.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 5,000 விண்ணப்பங்கள் தரப்படவுள்ளன.
ஏற்கனவே பொறியியல் கல்லூரி விண்ணப்பங்கள் தரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications