இன்று முஷாரப் டிவியில் பேச்சு
இஸ்லாமாபாத்:
இன்று தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்.
தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புவதைத் தடுக்காவிட்டால் போர் உறுதி என இந்தியா தெரிவித்துவிட்டது.
இந் நிலையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் ஏதும் இல்லை என்று முஷாரப்கூறியுள்ளார். இந்தியாவுக்குள் நுழைந்து தாக்கவும் கூட தனது ராணுவம் தயாராக இருப்பதாக முஷாரப்கூறியுள்ளார்.
முஷாரபின் இந்த பேச்சையடுத்து கடும் கோபமடைந்துள்ளது இந்தியா. தனது ஓய்வை ரத்து செய்துவிட்டு ராணுவஅதிகாரிகளுடன் பேச்சு நடத்த டெல்லி விரைகிறார் வாஜ்பாய்.
இதனிடையே இன்று தனது நாட்டு மக்களுக்கு முஷாரப் டி.வி, ரேடியோவில் உரையாற்றுகிறார். இதை உலகநாடுகள் கூர்ந்து கவனிக்கப் போகின்றன.
அதில் தீவிரவாதத்துக்கு எதிராக அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை இந்தியா கவனிக்கும். இதையடுத்துபாகிஸ்தான் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கும்.
இதற்கிடையே டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியபோதே பாகிஸ்தானை நாம்தாக்கியிருக்க வேண்டும் என பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். இதன்மூலம் இந்த முறை தாக்காமல் விடப்போவதில்லை என்பதை தெளிவாக்கியுள்ளார்.
அமெரிக்கா நேரடி கண்டனம்:
முதலில் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதை முஷாரப் தடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரானநடவடிக்கை தான் முக்கியம். ஏவுகணை சோதனையைவிட அது மிக அவசியம் என்று முஷாரபை நேரடியாவேஇடித்துரைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.












Click it and Unblock the Notifications