இடைத் தேர்தல்: நாங்க ரெடி என்கிறார் தேர்தல் கமிஷனர்
சென்னை:
மே மாதம் 31ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்துப்பணிகளும் முடிவடைந்துவிட்டன என்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் சாரங்கி கூறியதாவது:
சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வரும் மே மாதம் 31ஆம் தேதிஇடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்துபணிகளும் முடிவடைந்துவிட்டன.
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு தேர்தல் நடைபெறும் ஒவ்வொருவாக்குச் சாவடிக்கும் தலா ஒரு மின் வாக்குப் பதிவு எந்திரம் அனுப்பப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் 20 வேட்பாளர்களும் வாணியம்பாடியில் 26 வேட்பாளர்களும்போட்டியிடுகின்றனர். எனவே அத்தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா இரண்டு மின் வாக்குப் பதிவுஎந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் பதிவு செய்வதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும். மறுவாக்குப் பதிவு செய்யப்படுவது குறித்து அந்தந்த தொகுதிகளின் தலைமைத் தேர்தல்அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை பதிவுசெய்வதற்கு தக்க ஆவணங்களை அடையாளமாக காட்ட வேண்டும் என்பதும் தலைமை அதிகாரிக்குத்தெரிவிக்கப்படும் என்றார் சாரங்கி.












Click it and Unblock the Notifications