எல்லையில் பதற்றம்: உஷார் நிலையில் கடற்படை
கொச்சி:
எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, இந்தியா முழுவதிலும் கடற்படைஉஷார்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி காஷ்மீரில் ஜம்மூ அருகே கலுச்சாக் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியக் கடற்படை முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எந்நேரத்திலும் தீவிரவாதிகள்தாக்கலாம் என்பதால் அனைத்துத் துறைமுகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனுமதி பெறாமல் யார் துறைமுகத்துக்குள் நுழைந்தாலும் சுட்டுத் தள்ளும்படி கடற்படையினருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகப்படும்படியான கப்பல்கள் மற்றும் படகுகளை 50 மீட்டர் தூரத்திலேயே நிறுத்தி சந்தேகப்பட்டால் சுட்டுத்தள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியக் கடற்படையினரும் கடலோரக் காவற்படையினரும் இரவு பகலாகக் கடல் பகுதிகளில்ரோந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஹெலிகாப்டர்கள், கடலிலும் தரையிலும் செல்லும் திறன் கொண்ட "ஹோவர்கிராப்ட்" ரக படகுகள் ஆகியவை தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றன.
கப்பலில் வரும் சரக்குகளை இறக்கும் இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த வாரம் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சில போர்க் கப்பல்கள் நாளைக்குள்குஜராத்தில் உள்ள கட்ச் வளைகுடாவைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பாகிஸ்தானைக் குறி வைத்து அக்னி, பிருத்வி உள்ளிட்டஏவுகணைகள் காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடல் வழியாகப் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்தப் போர்க் கப்பல்கள் கட்ச்வளைகுடாவை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications