தேர்தல் விதிமுறையை மீறியதாக ராமதாஸ் மீதும் வழக்கு
அச்சிறுப்பாக்கம்:
தேர்தல் விதிமுறையை மீறியதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 8 கிராமங்களில் போலீசாரின் முன் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளுடன்சென்று பிரச்சாரம் செய்ததாக ராமதாஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது வாகனங்களிலோ அல்லது பொதுக் கூட்டங்களிலோ ஒலிபெருக்கிகளைப்பயன்படுத்தினால் போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னரே போலீசாரும் இதுகுறித்த ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் ராமதாஸ் பிரசாரத்தின்போது இது கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்துராமதாஸ் மீதும் அந்தப் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேல் வாணியம்பாடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகதிமுக தலைவர் கருணாநிதி மீது அவ்வூர் போலீசார் கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரான ஜெயலலிதாவும் அவருடைய தலைமையிலான அதிமுகவினரும் தான் தேர்தல்விதிமுறைகளை மீறி வருகின்றனர் என்று கருணாநிதியும் ராமதாசும் தொடர்ந்து புகார் கூறி வந்துள்ளனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications