அக்னி நட்சத்திரத்துக்கு "டாட்டா"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரத்தின் கொடுமை இன்றுடன் முடிவடைகிறது.

கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டஉயிர்களைப் பலி வாங்கியது. ஆந்திராவில் மட்டுமே 900க்கும் அதிமான மக்கள் இந்த ஆண்டு வெயிலுக்குப்பலியாயினர்.

தமிழகத்தில் இந்தக் கத்திரி வெயிலால் சென்னை மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் இரு நாட்களுக்கு மழை பெய்து தமிழக மக்களை மகிழ்வித்தது. ஆனால்அதைத் தொடர்ந்து அடித்த வெயிலால் மக்கள் பெரிதும் அவதியடைந்து விட்டனர்.

பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் புழுக்கம் காரணமாக தமிழக மக்கள் மிகவும் நொந்து விட்டனர். அதிலும் கடந்த14ம் தேதி எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக மின் தடை ஏற்படவே,சென்னை மாநகரமே அன்று இரவு வியர்வை வெள்ளத்தில் "குளித்தது".

அக்னி நட்சத்திரத்தின் கோரப் பிடியில் இருந்த இந்த 24 நாட்களில் அதிக பட்சமாக சென்னையில் 111 டிகிரிபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. புதுவையில் 109 டிகிரியும், வேலூரில் 108 டிகிரியும் கடலூரில் 107 டிகிரியும்பதிவானது.

சேலத்தில் வழக்கம் போல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 104 டிகிரி வெப்பமும் பதிவானது.

இதற்கிடையே அக்னி நட்சத்திரத்தின் போது மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரிபோன்ற தென்மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்தது. கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழைபதிவானது.

இப்போதும் தென்மேற்குப் பருவமழை துவங்கி விட்டதாகத் தெரிகிறது. பெங்களூரில் கடந்த நான்கு நாட்களாகமாலை அல்லது இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+