மதுரை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: போக்குவரத்து பாதிப்பு
மதுரை:
மதுரையை அடுத்த சோழவந்தானுக்கும் கொடை ரோடுக்கும் இடையே சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டதையடுத்து, அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவிலிருந்து அரிசி ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு கொடை ரோட்டைத் தாண்டி சோழவந்தான் அருகே வந்து கொண்டிருந்த போது அங்தரயிலின் 6 பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டு அருகிலுள்ள மற்றொரு ரயில் பாதையில் விழுந்து விட்டன.
இதையடுத்து திண்டுக்கல்-மதுரை பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலின்பெட்டிகளை அப்புறப்படுத்தி ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இன்று இரவு 7 மணிக்கு மேல் தான் இந்த ரயில் பாதை சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் தடம் புரளும் சம்பவம் சமீப காலத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.