For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் ராஜ்குமார் கடத்தல்: நக்கீரன் கோபாலும் குற்றவாளியாக சேர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலின் பெயரையும் போலீசார்சேர்த்துள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குள் அவர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குமேல் காட்டில் வைத்திருந்தான். பல முயற்சிகளுக்குப் பிறகு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்முயற்சியின் பேரில் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு வீரப்பனைத் தேடும் பணியும் ராஜ்குமார் கடத்தல்வழக்கும் வேகம் பெற்றன.

ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர்.தற்போது அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்நிலையில் கோபாலையும் குற்றவாளிகள் பட்டியலில் போலீஸார் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக கோபாலுக்குபோலீசார் அனுப்பியுள்ள சம்மனில், ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றவாளியாக உங்களது பெயர்சேர்க்கப்பட்டுள்ளது. எனவே பத்து நாட்களுக்குள் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தகவலை கோபாலின் வக்கீல் மோகன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

நக்கீரன் பத்திரிக்கையை ஜெயலலிதா அழிக்கப் பார்க்கிறார் என்றும் இதன் காரணமாகவே சிவசுப்ரமணியம் மீதுபொய்யான வழக்குப் போட்டுள்ள தமிழக அரசு தன் மீதும் வழக்குப் போட முயற்சித்து வருவதாக சமீபத்தில்தான்நக்கீரன் கோபால் தெரிவித்திருந்தார்.

சிவசுப்ரமணியம் மீதான வழக்கை கைவிடக் கோரி தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களை பத்திரிக்கை நிருபர்கள்சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றவாளியாககோபாலும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X