சைதை வாக்காளர் பட்டியல் குளறுபடி: கம்ப்யூட்டர் தான் காரணம் - தேர்தல் கமிஷன்
சென்னை:
சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு கம்ப்யூட்டர் கோளாறு தான் காரணம் என்றுதமிழக தலைமை தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலில் 5,463 பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அச்சிடப்பட்டுள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கடந்த 24ம் தேதி புகார் கூறியிருந்தார்.
எனவே இந்த 5,463 கூடுதல் பெயர்களையும் உடனடியாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றுதமிழக தேர்தல் கமிஷனுக்கு புகார் கடிதம் ஒன்றையும் திமுக அனுப்பியுள்ளதாகவும் கருணாநிதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று சாரங்கி நிருபர்களிடம் கூறியதாவது:
இதுகுறித்து திமுக மட்டுமில்லாமல் அதிமுகவிடமிருந்தும் எங்களுக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்துசைதாப்பேட்டை தொகுதியின் இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது.
அப்போது அந்த வாக்காளர் பட்டியலில் 4,782 பெயர்கள் இரு இடங்களில் வந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளோம்.
கம்ப்யூட்டர் கோளாறு காரணமாகத் தான் இவ்வாறு ஒரே நபரின் பெயர்கள் இரு முறை அச்சிடப்பட்டுள்ளன.
ஆனால் வேட்புமனு கடைசியாகப் பெறப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை வாக்காளர் பட்டியலைத்திருத்த முடியாது.
எனவே இந்த 4,782 மறு பெயர்ப் பதிவுகள் கொண்ட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு ஒரிஜினல் வாக்காளர்பட்டியலுடன் சேர்த்து வைத்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பப்படும்.
அந்த வாக்காளர்கள் ஒரு முறைக்கு மேல் ஓட்டுப் போட முடியாமல் தடுக்கப்படுவார்கள். வாக்குச் சாவடி தேர்தல்அதிகாரிகளுக்கு இதுகுறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளோம் என்றார் சாரங்கி