For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டிக் கொலை: அதிமுக பெண் எம்.எல்.ஏ. தலைமறைவு

By Staff
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே ஒரு பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அதிமுக பெண் எம்.எல்.ஏ. தன் குடும்பத்தினருடன்தலைமறைவாகி விட்டார்.

செங்கல்பட்டு அருகே உள்ள மேலமையூரின் பஞ்சாயத்துத் தலைவி மங்களம் (30) என்பவரின் கணவர் குட்டி (35).திருப்போரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான கணிதா சம்பத்தும் மங்களமும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

கடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் அதிமுக சார்பில் கணிதா சம்பத் போட்டியிட்டார். அதிமுகவில் டிக்கெட்கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்ட மங்களம், தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாயத்துத் தலைவியாகவும்ஆகிவிட்டார்.

இதனால் மங்களத்தின் மீது கடும் கோபத்துடன் இருந்தார் கணிதா சம்பத். இருவருக்கும் இடையே அடிக்கடிதகராறுகளும் எழுவதுண்டு.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.அன்று இரவு குட்டி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சில மர்மஆசாமிகள் குட்டியை வழிமறித்து சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டினர். இதில் குட்டி சம்பவ இடத்திலேயேரத்த வெள்ளத்தில் பிணமானார்.

தன் கணவர் படுகொலைக்குக் காரணம் கணிதா சம்பத் தான் என்று போலீசில் மங்களம் புகார் கொடுத்துள்ளார்.ஆனால் கணிதா சம்பத் தன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் குட்டியை கொலை செய்தவர்களை போலீசார் பிடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் செங்கல்பட்டுமருத்துமனைக்கு முன்பாகக் கூடி சாலை மறியல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மங்களம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணிதா சம்பத் மீது போலீசார் கொலை வழக்குஒன்றைப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மேலமையூரில் கடும் பதற்றம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X