நெல்லையில் 2 விபத்துக்கள்: 3 பேர் பலி
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே நடந்த 2 விபத்துக்களில் லாரி கிளீனர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
இம்மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் அருகே கொடுமடியாறு பகுதியில் மணல் அள்ளுவதற்காக 20தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
தளபதி சமுத்திரம் அருகே மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது லாரி திடீரென்று தலைகீழாகக்கவிழ்ந்தது.
இதில் செல்லத்துரை மற்றும் இசக்கியப்பன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ஆனால் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்து விட்டனர்.
இவ்விபத்தில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் ஆற்றுப் பாலம் அருகே ஒரு லாரிநிறுத்தப்பட்டிருந்தது. அதனருகேயே அதன் டிரைவரும் கிளீனரும் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மதுரையிலிருந்து ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை ஏற்றி வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி, நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரிக்கு அருகே நின்று கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கிளீனர் முத்து (19) சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார்.
இந்த இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications