Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாவூதுடன் தொடர்பு: இந்திய தாதா துபாயில் கைது

Subscribe to Oneindia Tamil

துபாய்:

மும்பையின் முன்னாள் தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான முத்தப்ப ரய் துபாயில் கைது செய்யப்பட்டுஇந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் முத்தப்பா ரய் மீது போதை மருந்துக் கடத்தல், ஆள் கடத்தல், கொலைகள்,கொலை முயற்சிகள் என பல வழக்குகள் உள்ளன. ஆனால், ரய்க்கும் தாவூதுக்கும் இடையில் கூட்டணி இருப்பதுதெரியவந்தபோது தான் மத்திய அரசு அதிர்ந்தது.

உடனே இவனை இந்தியா கொண்டு வர நடவடிக்கை சி.பி.ஐ. மூலமாக இன்டர்போல் உதவி நாடப்பட்டது.இன்டர்போல் உலகம் தழுவிய அளவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இவனை துபாய் போலீஸ்கைது செய்தது.

பின்னர் சி.பி.ஐ. குழு துபாய் சென்று இவன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதை துபாய் போலீசிடம்விளக்கியது. இந்திய வெளியுறவுத்துறையும் துபாய் அரசுடன தொடர்பு கொண்டு பேசியது.

இதையடுத்து இவனை இந்தியாவிடம் ஒப்படைக்க துபாய் முன் வந்தது. நேற்று நள்ளிரவில் துபாயில் இருந்துடெல்லி கொண்டு வரப்பட்ட இவன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று பெங்களூர் கொண்டு வரப்பட்டான்.

மங்களூரைச் சேர்ந்த இவன் கர்நாகத்தில் தனது ராஜ்ஜியம் நடத்தி வந்தான். பின்னர் தப்பி துபாயில் தஞ்சம்புகுந்தான்.

இன்று காலை மிக பலத்த பாதுகாப்புடன் பெங்களூர் கொண்டு வரப்பட்ட இவனை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணிநேரம் விசாரித்தனர். பின்னர் இவன் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். சி.பி.ஐயிடம் இருந்துஇவனைப் பெற்றுக் கொண்ட பெங்களூர் நகர குற்றவியல் போலீசார் மிக பலத்த பாதுகாப்புடன் தங்கள்அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

இன்று மாலை நீதிமன்றத்தில் இவனை ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பார்கள் என்று தெரிகிறது.

இவனைக் காப்பாற்ற தாவூத் கும்பல் முயலலாம் என்பதால் பெங்களூர் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவனது உயிருக்கு பிற கும்பல்களால் ஆபத்தும் உள்ளது. எனவே,இவனைப் பாதுகாப்பது பெங்களூர் போலீசாருக்கும் பெரும் தலைவலியாக இருக்கும்.

4 மாதங்களுக்கு முன்பு தான் தாவூதின் கும்பலைச் சேர்ந்த ஆப்தாப் அன்சாரியை இந்தியாவிடம் ஒப்படைத்ததுதுபாய். மேலும் பல தாவூத் கும்பல் ஆட்களின் பட்டியலை துபாய் போலீசிடம் இந்தியா தந்துள்ளது.

இவர்கள் இப்போது துபாயில் இருந்தாலும் தங்கள் கூட்டாளிகள் மூலம் தொடர்ந்து இந்தியாவில் ஆள் கடத்தல்,பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+