காதல் விவகாரம்: தூத்துக்குடி அருகே 2 தோழிகள் பரிதாப தற்கொலை
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே தோழியின் காதல் விவகாரம் அவரது வீட்டுக்குத் தெரிய வந்ததால், தோழி தன்னைத் தான்சந்தேகப்படுவாளோ என்று பயந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். அதைக் கேள்விப்பட்ட அவரதுதோழியும் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது கீழக்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்வளர்மதி. அவரது தோழி மேகலா. இருவரும் பீடி சுற்றும் வேலை பார்த்து வருகிறார்கள்.
வளர்மதி ஒரு பையனைக் காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரத்தை தோழி மேகலாவிடம் மட்டுமேசொல்லியிருந்தார்.
இந்த நிலையில் வளர்மதியின் வீட்டுக்கு அவரது காதல் விவகாரம் எப்படியோ தெரிய வந்தது. இதையடுத்துவளர்மதியை அவர்கள் கடுமையாகத் திட்டினர்.
இதைக் கேள்விப்பட்ட மேகலா பயந்து போனார், வளர்மதி தன் மீது சந்தேகப்படப் போகிறாளே என்று பயந்தஅவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தனக்குப் பயந்து தோழி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த வளர்மதி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.இதையடுத்து அவர் தன் வீட்டிற்குச் சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரண்டு தற்கொலைச் சம்பவங்களும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.












Click it and Unblock the Notifications