சைதையில் விதிகளை மீறும் திமுக, அதிமுக மீது தேர்தல் பார்வையாளர்கள் அதிருப்தி
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் பல இடங்களில் திமுகவும் அதிமுகவும் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டிருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சைதாப்பேட்டையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்து விட்ட நிலையில்தொகுதியின் பல இடங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டிருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அவர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்துமாவட்ட தேர்தல் அதிகாரியான சென்னை மாவட்ட கலெக்டர் அப்துல் சலாமிடமும் பார்வையாளர்கள் விளக்கம்கேட்டுள்ளனர்.
முக்கியச் சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் போஸ்டர்கள், கட்அவுட்கள், தோரணங்கள் கட்டக் கூடாது என்று விதி உள்ளது.
ஆனால் அதை மீறி அதிமுகவினரும் திமுகவினரும் பல இடங்களில் வளைத்து வளைத்து போஸ்டர்களை ஒட்டி,கட் அவுட்டுகளைக் கட்டி, தோரணங்களைத் தொங்கவிட்டுள்ளனர் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளதாகத்கூறப்படுகிறது.
ஒரு வேட்பாளர் ரூ.6 லட்சத்துக்கு மேல் செலவு செய்திருந்தால், அவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரதுபதவி பறிக்கப்பட்டு விடும். ஆனால் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்செய்துள்ள செலவுகள் இந்த அளவைத் தாண்டி விடும் என்று ஒரு தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள், போஸ்டர்கள் மற்றும் தோரணங்களைஉடனடியாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வேலையைச் செய்ய வேண்டிய சென்னை மாநகராட்சி தொடர்ந்து அமைதி காத்துக் கொண்டிருப்பதுதேர்தல் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.