For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 2 கேரள பெண்கள் சென்னையில் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திராவில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக கூறி விபசார விடுதியில் சேர்க்கப்பட இருந்த 2 கேரளபெண்களை சென்னை போலீசார் மீட்டனர்.

கேரள மாநிலம் மூவட்டுப்புழா பகுதியைச் சேர்ந்தவர் சோனியா மற்றும் எரிமேலியைச் சேர்ந்தவர் பென்சி.கோவையில் ஒரு பள்ளிக் கூடத்திற்கு ஆசிரியை வேலைக்கு ஆள் எடுப்பதாக கேரள பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில்வந்த விளம்பரத்தைப் பார்த்த இருவரும் சான்றிதழ்களுடன் கோவைக்கு வந்தனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் பள்ளிக் கூடம் எதுவும் இல்லை. இதனால் இருவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

என்ன செய்வது என்று இருவரும் விழித்துக் கொண்டிருந்த போது சுப்ப ரெட்டி என்ற நபர் அங்கு வந்தார். இருபெண்களையும் பார்த்த அவர் ஆந்திர மாநலம் நெல்லூரில் ஆசிரியை வேலை காலியாக இருப்பதாகவும், அங்குஅவர்களைச் சேர்த்து விடுவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பிய இரு பெண்களும் அவருடன் ரயிலில் சென்னை வழியாக நெல்லூருக்குக் கிளம்பினர். நெல்லூருக்குசெல்ல ரயிலுக்காக சென்னையில் அவர்கள் காத்திருந்த போது ரயில்வே டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும்இன்ஸ்பெக்டர் ஆரியமாலா ஆகியோருக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களை விசாரித்த போது இரு பெண்களையும் ஆந்திராவில் உள்ள ஒரு விபசார விடுதியில் விற்க சுப்ப ரெட்டிதிட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

உடனடியாக சோனியாவையும் பென்சியையும் மீட்ட போலீஸ் அதிகாரிகள், சுப்ப ரெட்டியைக் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X