இந்தியாவிடம் 150 அணுகுண்டுகள்
வாஷிங்டன்:
இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் மேலும் பல நூறு அணு ஆயுதங்கள் தயாரிக்கத்தேவையான கதிர்வீச்சுக் கனிமங்களும் இந்தியாவிடம் இருப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜேன்ஸ் வீக்லி என்ற சர்வதேச பாதுகாப்பு, ராணுவம் குறித்த லண்டன் பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
இந்தியாவிடம் பாகிஸ்தானிடம் உள்ளதைப் போல 3 மடங்கு அணு குண்டுகள் தயாராக உள்ளன. எந்த நேரமும்இந்த இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளலாம்.
இந்தியாவிடம் உள்ள மிக், மிராஜ், ஜாகுவார் ரக விமானங்களால் 20 கிலோ டன் எடையுள்ள அணு குண்டுகளைஏந்திச் செல்ல முடியும். இந்த எடையுள்ள அணு குண்டுகளை பிருத்வி, அக்னி, தனுஷ் போன்ற ஏவுகணைகள்மூலமும் இந்தியாவால் செலுத்த முடியும்.
இந்தியாவிடம் குறைந்தபட்சம் 50 முதல் 150 அணு குண்டுகள் உள்ள. மேலும் யுரேனியம், புளுட்டோனியம்போன்ற கதிர்வீச்சு கனிமங்கள் போதுமான அளவு இந்தியாவிடம் கையிருப்பு உள்ளது. இதைக் கொண்டு மேலும்அணு குண்டுகளை இந்தியாவால் தயாரிக்க முடியும்.
இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாகிஸ்தானின் அணு குண்டுத் திட்டம் பிற்பட்டது தான். அந் நாட்டிடம்25 முதல் 50 அணு குண்டுகள் இருக்கும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானின் அணுகுண்டின் அதிகபட்சத் திறன் 20 முதல் 25 கிலோ டன்கள். இந்த அணுகுண்டுகளைபாகிஸ்தானின் கோரி, ஷகீன் ஏவுகணைகளால் செலுத்த முடியும்.
அதே நேரத்தில் இந்தியாவிடம் 65 அணுகுண்டுகளும் பாகிஸ்தானிடம் 40 அணு குண்டுகளும் இருப்பதாகஅமெரிக்காவின் பென்டகன் கூறுகிறது. 10 அல்லது 20 அணு குண்டுகள் பயன்படுத்தப்பட்டாலே இரு நாடுகளிலும்லட்சக்கணக்காணவர்கள் உயிரிழப்பர் என்று கூறப்பட்டுள்ளது.