For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதியாக நடந்து முடிந்தது இடைத் தேர்தல்: 60 சதவீத வாக்குப்பதிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆங்காங்கே நடந்த ஒரு சில சிறிய வன்முறைச் சம்பவங்களுடன் தமிழகத்தில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கானஇடைத் தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த 3 தொகுதிகளிலும் சுமார் 60சதவீத வாக்குகள் பதிவாகின.

சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவுதொடங்கியது.

சைதாப்பேட்டையில் காலை 7 மணிக்கே மக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். இத்தொகுதியில் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடந்தது.

இத்தொகுதியில் தான் வன்முறை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கோட்டூர்புரத்தில் போலி ரேசன் கார்டுகள்மற்றும் போலி சாதிச் சான்றிதழ்களைக் காட்டி வாக்களித்தவர்களைத் தட்டிக் கேட்ட பொன்முடி அதிமுகவினரால்தாக்கப்பட்டார்.

இத்தொகுதிக்குட்பட்ட பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திமுக ஏஜென்டுகளை வாக்குச் சாவடிக்குள்செல்ல விடாமல் அதிமுகவினர் தடுத்ததையடுத்து திமுகவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னைமாநகரப் போலீஸ் கமிஷனர் விஜய்குமார் அங்கு வந்து அவர்களை அமைதிப்படுத்தினார்.

ஜெயராம் தெருவில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கொண்டு கள்ள ஓட்டுப் போடுவதாக மதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் தேர்தல் மிக அமைதியாக நடந்தது. வாணியம்பாடியில்பெண்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டனர்.

வாணியம்பாடியில் நண்பகல் 12 மணிக்கு பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவு சிறிது நேரம்மந்தமாக நடைபெற்றது.

எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறித்து தேர்தல் கமிஷன் இன்னும் சிறிது நேரத்தில்அறிவிக்கவுள்ளது.

மொத்தத்தில் இந்த இடைத் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X