எல்லையில் இந்திய உளவு விமானம் விழுந்து நொறுங்கியது
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானியில்லாமல் இயங்கும் உளவு விமானம் இந்திய- பாகிஸ்தான்எல்லையில் விழுந்து நொறுங்கியது.
ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் பாலைவனப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்தவிமானம் இன்று விழுந்து நொறுங்கியது. இதில் தரையில் இருந்த யாரும் காயமடையவில்லை.
இது வழக்கமான உளவு விமானம் தான் என இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.
எல்லை நிலவரம்- ஜஸ்வந்த் விளக்கம்:
இதற்கிடையே எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் இன்று விளக்கினார்.
முன்னாள் ராணுவ அதிகாரியான ஜஸ்வந்த் சிங் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எல்லை நிலவரம் குறித்தும்,வெளிநாடுகள் இந்த விஷயத்தில் எடுத்துள்ள நிலை குறித்தும் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications