சைதையில் வன்முறையைத் தூண்ட திமுக சதி: ஜெ. புகார்
சென்னை:
இன்று நடைபெறும் இடைத் தேர்தலின் போது சைதாப்பேட்டை தொகுதியில் வன்முறையைத் தூண்டிவிட திமுகதலைவர் கருணாநிதி சதித் திட்டம் தீட்டியுள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமானஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகளே அதிகம் நிலவி வருவதுகருணாநிதிக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே அதிமுகவிற்குச் சாதகமான இந்தச் சூழ்நிலையைக் குலைப்பதற்காக இத்தொகுதியில் பெரும்வன்முறையைத் தூண்டி விட கருணாநிதி திட்டம் தீட்டியுள்ளார்.
மேலும் பெண்கள், மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்றுஓட்டுப் போடாமல் இருப்பதற்கும் கருணாநிதி திட்டம் போட்டுள்ளார்.
இவற்றைத் தவிர அனைத்து வாக்குச் சாவடிகளிலும் திமுகவினரைக் கொண்டு கள்ள ஓட்டுப் போடவும் கருணாநிதிசதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இவற்றுக்கான அனைத்து உத்தரவுகளும் திமுகவினருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எனக்குச் செய்திகள்வந்துள்ளன. வாக்குப்பதிவு தொடங்கிய ஓரிரு மணி நேரத்திற்குள்ளாகவே கள்ள ஓட்டுக்களைப் போடவும்திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படி இவர்களே திட்டமிட்டு வன்முறைகளைத் தூண்டி விட்டு இவர்களே அதைத் தொலைக்காட்சிப்படமெடுத்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பவும் திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
திமுகவினரின் இந்தச் சதி வலையில் அதிமுகவினரும் மக்களும் சிக்கிக் கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும்என்றும் தங்களுடைய வாக்குகளை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூன்றிலும் அதிமுகவுக்கே வெற்றி - நடிகர் தாமு:
இன்று நடைபெறும் மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று நடிகரும்அதிமுக பேச்சாளருமான தாமு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை எங்கள் கோட்டை என்று சிலர் மனக் கோட்டை கட்டி வருகிறார்கள். இது பொய் என்று மக்கள் நிரூபிக்கப்போகிறார்கள். இதை சைதாப்பேட்டை பிரச்சாரத்தின் போது நான் நேரிலேயே கண்டேன்.
தமிழக மக்கள் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை இதயப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அவரையாராலும் அசைக்க முடியாது. 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று கூறியுள்ளார் தாமு.












Click it and Unblock the Notifications