For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்தில் 14,920 பேர் 100க்கு 100

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புத் தேர்வு முடிவுகளில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பத்தாவது வகுப்பு, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வு முடிவுகள் நேற்று(வியாழக்கிழமை) மாலை வெளியிடப்பட்டது.

மொத்தம் தேர்வு எழுதிய 6.2 லட்சம் மாணவ-மாணவியரில் 75.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்மாணவியர் 77 சதவீதமும் மாணவர்கள் 74 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மெட்ரிகுலேஷன் தேர்வில் 91 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். 92.7 சதவீத மாணவிகளும் 89.6 சதவீதமாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

பத்தாவது வகுப்பில் முதல் வகுப்பில் பாஸ் செய்தவர்களின் எண்ணிக்கை 57.7 சதவீதம் பேர். இவர்கள் தவிரமெட்ரிகுலேஷனில் 78.8 சதவீதம் பேரும் ஆங்கிலோ இந்தியனில் 86.9 சதவீதம் பேரும் முதல் வகுப்புபெற்றுள்ளனர்.

கணிதத்தில் மொத்தம் 14,290 மாணவ-மாணவியர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். அறிவியலில் 3,224 பேரும்,சமூக அறிவியலில் 169 பேரும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

வழக்கம் போல சென்னையைத் தவிர பிற ஊர்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் அதிக அளவில் ரேங்க்குகள்பெற்று சாதனை படைத்துள்ளனர். திருச்சி, கோவை, மதுரை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் அதிக அளவில் ரேங்க் பெற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X