For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரமக்குடி அருகே கோஷ்டி தகராறு: 5 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

பரமக்குடி:

பரமக்குடியில் வாங்கிய கடனை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட கோஷ்டித் தகராறில் 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் ஞானம் என்பவரிடமிருந்து அய்யாத்துரை என்பவர் கடன் வாங்கியிருந்தார்.

ஆனால் வெகு நாட்களாகியும் அய்யாத்துரை வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். இதனால் அய்யாத்துரையிடம் சென்ற ஞானம் பணத்தை உடனே திருப்பிக் கொடுக்கும் படிகேட்டார்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதையடுத்து ஞானத்துக்கு ஆதரவாக ஒருகோஷ்டியும் அய்யாத்துரைக்கு ஆதரவாக மற்றொரு கோஷ்டியும் கடுமையாக மோதிக் கொண்டன.

இந்தப் பயங்கரமான கோஷ்டித் தகராறில் பலர் காயமடைந்தனர். பரமக்குடியையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியஇந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு போலீசார் விரைந்து வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுவதைத்தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X