For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக ஏஜென்டுகளைத் தடுத்த அதிமுகவினர்: சைதையில் பெரும் பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்குள் திமுக ஏஜென்டுகளைச் செல்ல விடாமல்அதிமுகவினர் தடுத்ததைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு வாக்குச் சாவடிஅமைந்துள்ளது.

இந்த வாக்குச் சாவடியைச் சேர்ந்த திமுக ஏஜென்டுகள் இன்று காலை அந்தப் பள்ளிக்குள் நுழையும் போதுஅங்கிருந்த அதிமுகவினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதைக் கண்டித்து திமுக ஏஜென்டுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் அந்தப் பள்ளியின் முன்பாகஅமர்ந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தற்செயலாக அந்த வாக்குச் சாவடிக்கு சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் வந்தார்.திமுக ஏஜென்டுகளும் அவரிடம் இதுகுறித்து உடனடியாக முறையிட்டனர்.

அவர்களைச் சமாதானப்படுத்திய விஜயகுமார், அந்த வாக்குச் சாவடியில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தும்படிஅங்குள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அங்கு ஓரளவு பதற்றம் தணிந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X