For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி பொய் சொல்கிறார்: அதிமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தவறானபிரச்சாரம்செய்து வருவதாக அதிமுக கூறியுள்ளது.

முன்னாள் முதல்வரும் சைதாப்பேட்டை தொகுதிக்கான அதிமுக இன்சார்ஜுமான பன்னீர்செல்வம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

போலி ஜாதிச் சான்றிதழ்கள், போலி ரேசன் கார்டுகளைக் காட்டி வாக்காளர்களை ஓட்டு போட வைத்ததாககருணாநிதி கூறியிருக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு.

இது குறித்து திமுக பூத் ஏஜெண்டுகள் ஏன் போலீசில் எந்தப் புகாரும் தரவில்லை. தமிழகத்தில் பதற்றத்தைஏற்படுத்த கருணாநிதி நினைக்கிறார். அதன் மூலம் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரவைக்க நினைக்கிறார். இதைமக்களும் நாங்களும் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறோம்.

சைதாப்பேட்டையில் திமுக தோற்கப் போவது உறுதியாகிவிட்டது. இதனால் தான் இந்த பொய்யை அவிழ்ததுவிட்டுள்ளார் கருணாநிதி என பன்னீர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X