For Daily Alerts
Just In
ஊட்யிலிருந்து திரும்பினார் தமிழக ஆளுநர்
சென்னை:
ஊட்டியில் ஓய்வெடுத்து வந்த ஆளுநர் ராமமோகன் ராவ் ஓய்வு முடிந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னைதிரும்பினார்.
சென்னையில் வாட்டி வறுத்தெடுத்த வெயிலிலிருந்து விடுபட்டு ஓய்வு எடுப்பதற்காக ராமமோகன் ராவ் கடந்த 25ம்தேதி ஊட்டிக்குச் சென்றார்.
அப்போது அங்கு பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய ஊட்டிப் பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை சென்னைதிரும்பினார்.
கோயம்புத்தூருக்கு வந்த அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
Comments
Story first published: Saturday, June 1, 2002, 5:30 [IST]