தேர்தல் முறைகேடு: திமுக, போலீசாரிடம் அதிகாரிகள் விசாரணை
சென்னை:
சைதாப்பேட்டையில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுஇன்று தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தவுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த 31ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது வரலாறு காணாத அளவுக்கு தேர்தல் முறைகேடுகள்நடந்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் கமிஷனின் 3 பார்வையாளகள் விசாரித்து அறிக்கை அனுப்பினர்.
இதில் திருப்தியடையாத மத்திய தேர்தல் ஆணையம் மீண்டும் அது குறித்து விசாரிக்க அச்சிரப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி தொகுதிதேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த பூர்ஜியா, சந்தோஷ் குமார் ஆகிய இரண்டு மத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குஉத்தரவிட்டது.
இந்த இருவகும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்து தனது விசாரணையைத் தொடங்கினர். முதலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசாரங்கியுடன் இக்குழு ஆலோசனை நடத்தியது. புகார்கள் குறித்து கேட்டறிந்தது.
போலீசாரிடம் விசாரணை:
இதன் பிறகு இன்று காலை காவல்துறை அதிகாரிகள், தேர்தல் பணியில் இருந்த மாநகராட்சி அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்குநேரடியாக வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பொன்முடி சந்திப்பு:
சைதாப்பேட்டை திமுக தலைமை பூத் ஏஜெண்டான முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அந்தத் தொகுதியின்திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் ஆகியோரையும் இந்த அதிகாரிகள் நேரில் வரவழைத்து விசாரித்தனர்.
பிற கட்சிகளின் தேர்தல் ஏஜென்டுகள், வாக்குச் சாவடி அதிகாரிகள், வாக்காளர்களிடம் கேள்விகள் கேட்டு விசாரித்த பிறகு இறுதிஅறிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு இந்த இரு அதிகாரிகளும் அனுப்பி வைப்பர்.
அதன் பிறகே சைதையில் மறு தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதனால் இங்கு வாக்குஎண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications