சபதம் முடித்தோம்: திருமாவளவன்
பாண்டிச்சேரி:
அச்சிரப்பாக்கம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியடைய வேண்டும் என்று அத்தொகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் சபதம்எடுத்தனர். அதேபோல செய்து காட்டியுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் இல்லைஎன்பது இடைத் தேர்தல் மூலம் தெரிந்து விட்டது. அதிமுகவையும், திமுகவையும் சார்ந்துதான் அது செயல்பட முடியும்.
இரு கூட்டணிகளில் ஏதாவது ஒன்றில் இருந்து கொண்டுதான் இத்தனை காலம் அது குளிர் காய்ந்து வந்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.
திமுகவின் ஓட்டைத்தான் அச்சிரப்பாக்கத்தில் பாமக பெற்றுள்ளது. பாமக வெற்றி பெறக் கூடாது என்று அச்சிரப்பாக்கம் தாழ்த்தப்பட்டமக்கள் சபதம் எடுத்திருந்தனர். அது நிறைவேறியுள்ளது.
தேர்தல் நடந்த 3 தொகுதிகளிலும் அதிமுகவினர் பெரும் முறைகேடுகளைச் செய்தனர். 3 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தப்படவேண்டும்.
தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துகளான பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்கள் உயர் ஜாதியினரால்மிரட்டப்பட்டனர். இதனால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதங்களை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது தவறு.இதைக் கண்டித்து ஜூன் 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications