வாக்குச் சாவடியில் திமுக- அதிமுக மோதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தேர்தல் ஏஜெண்டான ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை தொகுதியில் வாக்களிக்கச் சென்றபோது அவருக்குஎதிராக அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதனால் அவருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் ராதாகிருஷ்ணன் வாக்களிக்கச் சென்றார்.அப்போது அங்கிருந்த அதிமுக ஏஜெண்டுகள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து அவர்களுடன் ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொஞ்சமாவது நாகரீகமாக நடந்துகொள்ள கற்றுக் கொள்ளுங்கள் என்றார். இதையடுத்து அவரை அதிமுகவினர் ஒருமையில் திட்ட ஆரம்பித்தனர்.
உடனே அங்கிருந்த போலீசார் ஓடிவந்து அதிமுகவினரை விட்டுவிட்டு ராதாகிருஷ்ணனுக்கு அறிவுரை கூறினர்.இதனால் டென்ஷனாகிப் போன ராதாகிருஷ்ணன் போலீசாரை திட்டிவிட்டு வெளியேறினார்.












Click it and Unblock the Notifications